Pages

30 September 2005

அண்ணா பல்கலைக்கழகத்தின் உடை கட்டுப்பாடு


கல்லூரிக்கு வரும் பெண்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ், குட்டைப்பாவாடைப் போன்ற உடைகளை உடுத்தி வரக் கூடாது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கட்டுப்பாடு விதித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!

பெண்ணுரிமை என்றால் என்னவென்றே விளங்கிக் கொள்ள சக்தியில்லாதவர்கள் வழக்கம் போல தங்கள் வார்த்தை ஜாலங்களால் துணைவேந்தர் உட்பட அந்தக் கருத்தில் இருப்பவர்களை சாடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய கருத்துக்கு இஸ்லாமிய சாயம் கூட பூசப்பட்டது.


மத நம்பிக்கையை ஒருபக்கம் ஒதுக்கி விட்டு இந்த பிரச்சனையை யோசிப்போம். ஒரு பல்கலை கழகத்தின் துணைவேந்தர் 'பெண்கள் ஆடை விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை ஏன் வெளியிட வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

உயர்கல்வியும் அது போதிக்கப்படும் வளாகமும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் - துணிவையும் - சிந்தனைத் தெளிவையும் ஏற்படுத்தும் இடமாகும். அத்தகைய இடத்திலிருந்து மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் ஒரு கல்வியாளர் இத்தகைய கருத்தை முன் வைக்கிறார் என்றால் கல்வி ஏற்படுத்த வேண்டிய மாற்றத்திற்கும் மாணவியர் உடுத்தும் உடைக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகின்றது. சில மாணவியர் தங்கள் தன்நம்பிக்கைக்கு உடையையே அடையாளமாக்கும் போக்கை கையாள்கிறார்கள். இந்த போக்கை அவர்கள் தங்கள் கல்வி மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பெறுவதை விட 'அழகித் தேர்வு' என்ற பாலியல் நுகர்வு இடங்களிலிருந்தே பெறுகிறார்கள்.

உடம்பின் முக்கால் பாகம் தெரியக் கூடிய அளவிற்கு துண்டு உடையுடன் அழகிப்போட்டிக்கான மேடைகளில் வளைந்து, நெளிந்து நடந்து தங்கள் சதை பிடிப்புகளுக்கு சர்ட்டிஃபிகேட் வாங்கும் சில வியாபார பெண்கள் 'வெற்றிவாகை? சூடியவுடன் முதலில் பேசுவது தனது 'தன்னம்பிக்கை'யைப் பற்றிதான். 'நாங்கள் 'சாதிக்க முடியும்' என்ற தன்னம்பிக்கை மூலதனமாகக் கொண்டே வெற்றிப் பெற்றுள்ளோம்' என்று வாய் கூசாமல் கூறுவார்கள். அந்த செக்ஸ் வியாபார குறியீடுகளின் உடம்பில் பார்வையை மேயவிடும் வக்கிரம் மிக்க நடுவர் கூட்டம் இந்த தன்னம்பிக்கையை ஆஹா.. ஓஹோ.. என்று பாராட்டி மார்க் போடும்.

சென்சார் தடைகளின்றி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் இத்தகைய போட்டிகளும், கருத்துக்களும் கல்லூரி மாணவிகளை வெகுவாக பாதிக்கின்றது. அதனுடைய பிரதிபளிப்புதான் இத்தகைய ஆடைக் குறைப்பு கலாச்சாரமாகும்.

கல்வி முறைக்கும், தற்போது ஏற்பட்டு வரும் கலாச்சார மாற்றங்களுக்கும் மத்தியில் பெரிய வேறுபாடு இருப்பதை தெளிவாக உணரும் தருணம் இது.

கல்வி ஏற்படுத்த வேண்டிய சமூக மாற்றங்களை விட இத்தகைய மீடியாக்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பெண்ணிய மாற்றங்களே இன்றைக்கு நாம் எதிர்கொள்ள வேண்டிய பெரும் சவாலாக இருந்துக் கொண்டிருக்கிறது.

குறை உடைகளுடன் காட்சியளிக்கும் மாணவிகளிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகள் சில உண்டு.இந்த குறை உடைகளின் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

தேவையான அளவு உடை உடுத்தி இருக்கும்போதே ஆண்களுக்கு பெண்கள் பெரும் சவாலாக அமைகிறார்கள் என்றால் இந்த குறை உடைகளால் ஆணை தவறான வழிகளுக்கு கூடுதலாக தூண்டுவதில் உங்களுக்கு என்ன வெற்றி கிடைக்கப்போகிறது? தொடை - மார்புப் பகுதிகள் - முதுகு என்று முக்கியமாக மறைக்க வேண்டிய பல பகுதிகளை திறந்து பள்ளிக்கு செல்கிறீர்களே, உடன் படிக்கும் மாணவர்கள் பிற பள்ளி, கல்லூரி மாணவர்கள் உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கும் போது எப்படி கல்வியில் முன்னேறுவார்கள்? ரேகிங், ரேப்பிங், ஈவ்டீஸிங் போன்ற பெண் விரோத கொடுமைகள் நடப்பதற்கு பாலியலைத் தூண்டும் உங்கள் உடைகள் முக்கிய காரணமாவதை உங்கள் அறிவு ஒத்துக்கொள்ள மறுப்பதேன்?

'அரை குறை உடைகள் தான் சுதந்திரம், இப்படி உடை உடுத்தினால் தான் சாதிக்க முடியும்' என்று நீங்கள் கருதினால் முழு அளவு உடை உடுத்தி சாதிக்கும் பெண்களையும், குறை உடைகளை அறவே உடுத்தாமல் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் ஆண்களையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது? நீங்கள் திறந்து வைத்திருக்கும் பகுதிகள் கவர்ச்சிப் பகுதிகள் அல்ல என்று சொல்ல வருகிறீர்களா..?

நீங்கள் கற்கும் கல்வியில் எந்தப் பாடம் இத்தகைய உடைகளை 'சுதந்திரம்' என்று கூறி உங்களை ஊக்குவிக்கிறது?. இந்தக் கேள்விகளுக்கு 'சுதந்திரம்' பேசும் மாணவிகள் பதில் சொல்ல வேண்டும்.

துணைவேந்தரின் அறிவிப்புப் பற்றியும் மாணவிகள் அணியும் இத்தகைய உடைகள் பற்றியும் சில பெண்களின் கருத்தை 'தினமணி'யிலிருந்து கொடுக்கிறோம்.

கவர்ச்சி உடையணிந்து கலாசாரத்தைக் கெடுக்கும் கல்லூரி மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியே! பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் மாற்றுவது மாடர்ன் டிரஸ். ஆடை குறைப்போடு கூடிய மாடர்ன் டிரஸ், வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தை சீர்கெடச் செய்துவிடும். - கவிஞர் அருணா ராஜேந்திரன், கூத்தூர்.

மாடர்ன் டிரஸ் அணிவது நாகரிகமாய் இருந்தாலும் தமிழருடைய பண்பாடு கெடுகிறது. இது கலாசாரத்தை இழிவுபடுத்துவதற்கு சமம். இதைத் தடை செய்வது ஈவ்-டீஸிங்கை தடுக்கும். ஆகவே மாடர்ன் டிரஸ் அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியானதாகும். - கே.பிரேமா வி.கே.புரம்

மாடர்ன் டிரஸ் அணிவது, கல்லூரி இளைஞர்களிடையே ஈவ்-டீஸிங் செய்ய தூண்டுகோலாக அமையும். புடவை கட்டிக்கொண்டு சென்றால் அவ்வளவாக ஈவ்-டீஸிங் இருப்பதில்லை. எனவே கல்லூரிகளில் மாடர்ன் டிரஸ்க்கு தடை விதித்தது சரியே. - சி.எஸ். பத்மாவதி. குடியாத்தம்

ஆடைகள் என்பது மனித சமுதாயத்துக்கு மதிப்பு, மரியாதை தரவேண்டும். எனவே கண்ணியமாக உடை உடுத்துவது அவசியமாகும். ஆடை அணிய வேண்டிய முறை குறித்து குர்ஆனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாணவிகளுக்கும் பொருந்தும். - சல்மா பேகம், சிங்கபெருமாள் கோவில்

மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் அருவருக்கத்தக்க உடைகள் அணிவதைத் தடை செய்ய வேண்டும். மாணவிகளுக்கு தடை விதித்திருப்பதைப் போல, மாணவர்களும் அநாகரிகமாக உடை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும். இதைச் செயல்படுத்துவது பெற்றோர்களின் முதல் கடமை. - யூசிமா, தென்கரை பெரியகுளம்

கல்லூரி மாணவிகள் மாடர்ன் டிரஸ் அணிவது தவறல்ல; மாடர்ன் டிரஸ் என்ற பெயரில், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அரைகுறை ஆடைகளுடன் வளைய வருவதுதான் தவறு. ஆடை என்பது பண்பாட்டையும், கலாசாரத்தையும் உணர்த்துவது. அதற்காக ஒன்பது கஜ புடவைகளை சுற்றிக்கொண்டு வர வேண்டியதில்லை. அணியும் ஆடை ஒருவருக்கு கம்பீரத்தையும், மனதில் மரியாதையையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். - கு.பெருந்தேவி, சென்னை

உடலை மறைப்பதற்காகத்தான் உடை உடுத்துகிறோம். உடல் வெளியில் தெரியும்படி பெண்கள் உடை அணிவதால், ஆண்கள் தவறு செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது. உள்ளத்திலிருந்து வரவேண்டிய காதல், உடல் கவர்ச்சியிலிருந்து வருகிறது. முன்பெல்லாம் தவறு ஏற்படுவது அபூர்வமாக இருந்தது. இப்போது நடக்கும் தவறுகளுக்கு பெண்கள் அணியும் உடையே முக்கிய காரணமாக உள்ளது. சேலை கட்டுவதுதான் சிறந்தது, பண்பாடும் கூட. - வி.வேலாமுத முத்தம்மாள், காந்தி சேவா சங்கம், சத்திரப்பட்டி

கல்லூரிகளில் மாடர்ன் டிரஸ் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பது சரியானதுதான். மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் ஆபாசமாக உடை அணிகின்றனர். இந்த உடையுடனே பொது இடங்களுக்கும் வருகின்றனர். ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு இது சமம். ஸ்லீவ்லெஸ் மேலாடையும், டைட் ஜீன்ஸம் ஆண்களை படுத்துவது நிஜம். - விஜயஸ்ரீ இராஜேந்திரன், மொரட்டுப்பாளையம்

நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. கல்லூரிக்குச் செல்வது படிப்பதற்காகத்தான். ஆடை அலங்காரத்தை ரசிப்பதற்காக அல்ல. சினிமா மோகத்தால், திசை மாறி நடைமுறைக்கு ஒத்துவராத ஆடைகளை அணிய தடை விதிப்பது தவறில்லை. பள்ளிகள் போன்று சீருடை கூட அறிமுகப்படுத்தலாம். நமது கலாசாரத்தை கட்டிக்காக்க இது உதவும். - ச.ஜெயஸ்ரீ, நங்கநல்லூர்

உடைக்கட்டுப்பாட்டை வரவேற்க்கும் மாணவர்களும், பெற்றோரும்



நன்றி: இதுதான்இஸ்லாம்.காம்

15 September 2005

பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா?

பெண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை

இஸ்லாம் என்பது மனிதகுலம் முழுமைக்கும் இறைவனால் இறக்கிவைக்கப்பட்டது. விருப்பு, வெறுப்புக்கு அப்பற்பட்டது. ''அப்படிதானேயொழிய இப்படியும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது முழுமையாக்கப்பட்டுவிட்டது. வாதப்பிரதி வாதங்களுக்கு அப்பாற்பட்டது. ஆகையால், பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதோ இல்லையோ ஆணையிடப்பட்டுவிட்டது. அணிந்தே தீர வேண்டியது கடமை. இருப்பினும் ஏக இறைவன் இந்த பர்தா பெண்களுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றது என்று கூறுகின்றான்.

நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளான பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானையை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும். அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 33:59)

இந்த வசனம் ஒன்றே கட்டுரையின் தலைப்பிற்கு அதிக வலு சேர்க்ககூடியதாக உள்ளது. மேலும் இறைவன் பர்தாவைப்பற்றி கூறும்போது,
மேலும் (நபியே!) பிசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிபாதுகாத்துக் கொள்ளவும்: அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளைதம் மேல்சட்டைகளில் மீது போட்டு(தலை,கழுத்து,நெஞ்சு, ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்.... அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவதற்காக, தங்களுடைய கால்கள் பூமியில் தட்டி நடக்க வேண்டாம். (அல்குர்ஆன் 24:31)

....மேலும் (நபியுடைய மனைவியராகிய) அவர்களிடம் யாதொரு பொருளைக் கேட்க நேரிட்டால், நீங்கள் திரைக்கு அப்பால் இருந்துக் கொண்டே அவர்களிடம் கேளுங்கள். அவ்வாறு செய்வது உங்கள் உள்ளங்களுக்கும் அவர்கள் உள்ளங்களுக்கும் மிகப் பரிசுத்தமானதாகும். (அல்குர்ஆன் 33:53)
மேற்காணும் வசனங்களில் ஏக இறைவன் கூறும் போது பெண்கள் பர்தாவை கண்டிப்பாகப் பேணவேண்டும் என்பதைக் கூறி அதனால் நீங்கள் (பெண்கள்) கண்ணியமானவர்களாகக் கருதப்படுவீர்கள் என்றும் கூறுகின்றான். ஆக பெண்களை சுதந்திரமானவர்களாக இருக்கும் பொருட்டே பர்தாவை இறைவன் கட்டாயப்படுத்தியுள்ளான்.

எவ்வாறு ஹிஜாப் இருக்கவேண்டும்?

ஹிஜாபை இறைவன் கடமையாக்கியதற்க்கு முதல் காரணம் தீய பார்வையை, எண்ணத்தை, நடவடிக்கையை தடுக்கக் கூடியதாக உள்ளது.
இரண்டாவது, பெண்கள் சுதந்திரமாக தங்களுடைய தேவையை பூர்த்திசெய்துக் கொள்ளவும் இந்த பர்தா ஏதுவாக அமைந்துள்ளது.

முக்கியமாக இந்த பர்தாவையே அலங்காரமாகவும் அணியக்கூடாது. மேலும் இந்த பர்தாவை நபி(ஸல்) அவர்களின் மனைவியரும், சஹாபியப் பெண்களும் எவ்வாறு அணிந்து வந்தனர் என்பதை இனி பார்ப்போம்.

"நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இஹ்ராமுடைய சமயத்தில் இருக்கும் போது, குதிரை வீரர்கள் எங்களைக்கடந்து செல்லும் போது நாங்கள் எங்கள் தலையிலிருக்கும் துணியை முகத்தின் மீது இழுத்து மூடிக்கொள்வோம். அவர்கள் கடந்து சென்றதும் நாங்கள் (முகத்திரையை) விலக்கிக் கொள்வோம்" அறிவிப்பவர்: அயிஷா(ரலி) - ஆதாரம்: அபூதாவூத் 1833
"நாங்கள் ஆண்களுக்கு முன்னால் முகத்தை மூடுபவர்களாக இருக்கிறோம்". அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி), ஆதாரம்: இப்னு குஸைமா, ஹாகிம்.

இவை நபி(ஸல்) அவர்களால் கூறப்படாவிட்டாலும் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையிலும், அவர்களின் காலக்கட்டத்திலும் நடந்தேறியுள்ளது. இதை நபியவர்கள் தடுக்கவில்லை. இருப்பினும் சில ஹதீஸ்களில் பெண்கள் முகத்தை மூடாமலும் இருந்துள்ளனர். உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்து இந்த கறுப்பு நிற பெண்மணி பொறுமையின் காரணத்தால் இவர் சுவனவாசி என்றுள்ளார்கள்.
ஆகவே இவற்றைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டால் எந்த பிரச்சினையும் வராது என்று கூறிவிடமுடியாது. அது அவளின் நடவடிக்கையை பொறுத்தேயுள்ளது. ஆண்கள் நம்மை கவனிக்கிறார்கள் அதனால் ஏதும் தீங்கு விளையும் என்று எண்ணினால் முகத்தை மறைக்கலாம்.

பர்தா இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்:

ஏக இறைவன் பெண்களை வசீகரமானவளாக படைத்துள்ளதாக (அல்குர்ஆன் 3:14) இவ்வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

பெண்கள் தங்கள் அழகை பர்தாவைக்கொண்டு மறைக்க வேண்டுமென்று ஏற்கனவே நாம் பார்த்தோம். காரணம் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள் என்று, மேற்கூறப்பட்ட பெண் பர்தாவைக் கொண்டு தன்னை மறைக்காவிட்டால்! தவறான செயல்கள் (ஈம்மொரல் ஆcடிவிடிஎச்) செய்வதற்கு தூண்டுகோளாய் அமைந்துவிடும். அதனால் தான் இன்று பரவலாக காணப்படும் ஏவெ Tஎஅசிங் (பெண்களை கேலி செய்வது) கற்பழிப்பு, கொலை, கொள்ளை இதுப்போன்ற பல இன்னல்களுக்கு பெண் அலைக்கழிக்கப்படுவாள்.

இன்று நாகரீகத்தின் உச்சியில், சுதந்திரத்தின் உரிமையாளர்கள், பொருளாதாரத்தின் சூத்திரதாரிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் மேற்கத்திய நாகரீகங்களில் காண்பதென்ன? பர்தா இல்லாமல் போனதாலே அரைகுறை ஆடையணிந்து உலாவரும் மாதுக்கள், நகரின் அழகான புல்வெளி பூஞ்சோலைகளிலே போவோர் வருவோர் காணும் வண்ணம் தம் காமக் களியாட்டங்களை வெட்கமின்றி நிறைவேற்றும் கூட்டங்கள். தந்தை மகளையும், தாய் மகனையும். அண்ணன் தங்கையையும் அறிய முடியாத குடும்ப பாங்கு. விலங்கை விட கேவலமாக களியாட்டங்கள் நிறைவேறுகின்றன. பர்தா இருந்திருந்தால் இந்நிலை தோன்றுமா? பெரும் போர்களுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் வித்திடும் பெண் கவர்ச்சியை மூடி மறைத்தால்தான் இப்பூமி அழகானதாக இருக்கும்.

இன்று அமெரிக்காவில், ஐரோப்பாவில் காண்பதென்ன?
1) திருமணத்துக்கு முன்பு செக்ஸ்,
2) திருமணத்திற்க்கு அப்பாற்பட்ட செக்ஸ்,
3) கணவரிடம் தன் பாய் ஃபிரண்டை அறிமுகப்படுத்தும் அவலம். மற்றும் பிற....

இதுவே, பர்தா முறையை அமல்படுத்தும் இஸ்லாமியர்கள் மத்தியில்.
1) சீரான குடும்ப அமைப்பு,
2) இனம் காணும் உறவுகள்,
3) திட்டமிட்ட திருமணங்கள்,
4) குற்றங்களின் குறைவுகள்,
5) பொருளாதார சீரழிவுகள் இல்லாமை,
6) அரசாங்கங்களின் காவல்துறைக்கு பணிக் குறைவு. மற்றும் இன்னும்பிற
பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என்று வாழ்ந்து காட்டியவர்கள்:

இக்கட்டுரையை படிக்கக்கூடிய ஒவ்வொரு பெண்மணியும் பர்தாவை பேணக்கூடியவர்களே! இன்ஷா அல்லாஹ். நமக்கு எந்த விதத்திலும் பர்தா பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சுதந்திரத்தை பறிக்கவுமில்லை. நபி(ஸல்) அவர்கள் காலம் முதல் இந்தக்காலம் வரைஇஸ்லாத்தை முழுமையாக ஏற்ற ஒவ்வொரு பெண்ணும் பர்தாவை அணியக்கூடியவர்களே! இருப்பினும் இன்றைய காலக்கட்டத்தில் பிரபலமாக திகழும் முஸ்லிம் பெண்கள் பர்தாவைப்பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை இனிபார்ப்போம்.

கமலா சுரய்யா:
இவருடைய வாழ்க்கை இஸ்லாத்தை தழுவதற்கு முன்பு காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு கொண்டு ஓடியது. உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்று சொன்னால் உலகத்தில் அழகு எங்கு உள்ளது என்று சொன்னால் இளமையான பெண்களின் நிர்வாணத்தில் உள்ளது என்று பறைசாற்றி அப்படிப்பட்ட ஒவியத்தையும் வரைந்து விற்பனையும் செய்தார்.
இப்படியாக இருந்த அவர்களுடைய வாழ்க்கையில் 'இஸ்லாம்' எனும் ஜீவ நதி பாய்ந்தது. அவர் ஹிஜாப் அணிந்தார். இஸ்லாமானது அவர்களுடைய வாழ்க்கையை முழுமையாக மாற்றியது. இவர் இஸ்லாத்தை தழுவிய போது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இச்சமயத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சுரைய்யா கொடுத்த பதில் என்ன என்பதைப் பார்ப்போம்!

கேள்வி: இஸ்லாத்தில் உங்களை கவர்ந்தது எது?
சுரைய்யாவின் பதில்: நான் முதலில் இஸ்லாத்தில் விரும்புவது, பெண்கள் அணியும் ஹிஜாப் முறையைத்தான். ஏனெனில் அது கண்ணியத்தை தருகிறது. என் வாழ்வில் ஒழுக்கத்தை தந்து நேரான பாதைக்கு வழிவகுக்கிறது என்று பதில் கூறி இனி என்னுடைய இஸ்லாமிய பணியை நான் இந்த ஹிஜாபுடன் துவங்குவேன் என்று கூறி முடித்தார்.
மேலும் தற்போது சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் (ஆதென்ச்௨004-ஓலிம்பிc Gஅமெச்) போட்டியில், ஈரான் நாட்டு பெண்மணி துப்பாக்கி சுடும் போட்டியில் ஹிஜாபுடன் பங்கேற்றார். அதுமட்டுமல்ல இன்று பல பிரபலமான பெண்கள் இஸ்லாத்தினுடைய பல விஷயங்களில் ஈர்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்கின்றனர். இதில் ஹிஜாபின் அவசியத்தையும், பயனையும் அறிந்து அதனால் இஸ்லாத்தை ஏற்றவர்களும் இதில் அடங்குவர்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்ன வென்றால் பர்தா அணிந்தும் சில விஷயங்களை பெண்களுக்கு இஸ்லாம் தடுக்கின்றது அவற்றில் இரண்டு விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

1) அவள் ஒரு தொழில் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஆண்களுடன் கலந்து இருக்கக் கூடாது. காரணம்: பாலியல் ரீதியாகவும், மன பீதியாகவும். பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.

2) அரசியல் கூடாது காரணம்: அவளின் உடற்கூறு (மாதவிடாய், கர்ப்பம்...) போன்ற காரணங்களால் சமுதாயத்தின் மேல் உள்ள கவனம் சிதறுமாதலால் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியாது. ஆக இவைகளில் ஈடுபடுவதுதான் சுதந்திரம் என்று கூற முடியாது. எனவே இஸ்லாம் பர்தாவின் விஷயத்தில் சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை.

பர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்:
பர்தா என்பது ஒரு அடிமைத்தனதான ஆடை, பிற்போக்குதனமான ஆடை, பர்தா அணிந்த பெண்கள் தீவிரவாதிகள், பெண்களின் சுதந்திரத்தை முழுமையாக பறிக்கக்கூடிய ஆடை என்று பல்வேறு துவேஷங்களுக்கு உள்ளான இந்த பர்தா முறையை, இன்று உலகில் பல பெண்கள் அதன் அவசியத்தையும், பயனையும் அறியக்கூடியவர்களாக இருகின்றனர். அதனை உணரவும் செய்கின்றனர். இன்று பல மேற்கத்திய நாடுகளை நாம் பார்க்கும்போது கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைகின்றனர். இதனை "The Almanac book of facts"" என்ற புத்தகத்தில் உலக மக்கள் தொகையில் கடந்த 10 வருடங்களில் இஸ்லாம் 137% கிறிஸ்தவம் 46% இதில் பெண்கள் மட்டுமே இவ்வளவு சதவீதத்தில் இஸ்லாத்தில் இணைகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அல்ஹம்து லில்லாஹ். தற்போது அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 1,00,000 மக்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர் என்றும். இதில் பெண்கள் 4 என்றால் ஆண்கள் 1 என்ற நிலையில் இஸ்லாத்தை தழுவுகின்றனரே ஏன்? ஏன்? என்ன காரணம்? புரியவில்லையா? அது தான் இஸ்லாம் காட்டும் அழகிய வாழ்க்கை நெறிமுறை எவராலும் மாற்றமுடியாத சட்டங்கள் என்றும், பலவாராக இஸ்லாம் மக்களால் கவரப்படுகின்றது.

பெண்களை பொறுத்தவரை இஸ்லாமானது அவர்களுக்கு அளிக்கக்கூடிய கண்ணியம், ஒழுங்குமுறை, உரிமைகள், சலுகைகள் என்று எல்லாவிதத்திலும் கவர்கின்றது. இதில் குறிப்பாக மேற்கத்திய பெண்கள் இஸ்லாத்தையும், ஹிஜாபையும் தவறாக எண்ணிய காலம் மாறி பலர் அதனை அறியவும், ஏற்கவும் முனைகின்றனர். http://www.usc.edu/dept/MSA/newmuslims/ என்ற இணயதளத்தில் இதற்கு உதாரணமாக ஒரு மேற்கத்தியப் பெண் தன்னுடைய நிலைப்பட்டை கூறுகிறார். அதை இங்கு பார்ப்போம்.
நஹீத் முஸ்தஃபா - மக்கள் என்னை நோக்கும் போது கிளர்ச்சி காரியாக அல்லது அடிப்படைவாதியாக அல்லது ஏகே 47 என் ஆடைக்குள் மறைத்து வைத்திருப்பதாகவும் அல்லது அடக்கிவைக்கப்பட்ட பெண்ணைக் காட்டும் விளம்பரப்பலகைப் பெண்ணாகக் கண்டார்களோ எனக்குத் தெரியாது. என்னை(Canadian) கனடியர்கள் வினோதமாகப் பார்ப்பதையும், உற்று உற்று பார்ப்பதையும், மறைந்திருந்து பார்ப்பதையும் நான் உணர்ந்தேன். மேலும் என்னை காணும் சிலர் ஏன் இதை அணிந்து மிகவும் துன்பப்படுகிறாள் என்றே நினைக்கிறார்கள். என்னை கேட்கவும் செய்கின்றார்கள். இந்த ஆடையை நான் ஏன் அணிகின்றேன் என்றால் இது முஸ்லிம் பெண்ணான எனக்களிக்கப்பட்ட தனி உரிமை. ஏன்? 21 வயதான குமரிப் பெண்ணான, கனடா நாட்டிலேயே பிறந்து வளர்க்கப்பட்ட பெண்ணான வட அமெரிக்கா நாட்டில் எல்லாவகை சுதந்திரங்களும் அள்ளி அருளப்பட்ட நான். என் மணிக்கட்டு மற்றும் முகம் தவிர மற்ற அனைத்து பாகங்களும் போர்த்திய ஆடையான பர்தாவை அணிகின்றேன். என்றால் எதற்கு? ஏன்? (Bஎcஔசெ இட் கிவெச் மெ fரேடொம்) ஏனெனில் அது எனக்கு முழு சுதந்திரத்தையும் வழங்குவதால்!

பர்தாவை பிற்போக்குத்தனம் என்று கூறுபவர்களின் நோக்கம்:
பர்தாவை பற்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்களின் கூற்று:
1) அது காட்டுமிராண்டித் தனமானது. 2) கெடுதி உண்டாக்கக் கூடிய கலாச்சாரம். 3) பெண்களுக்குள் பர்தா அணிந்தவர்கள் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற அந்தஸ்தை ஏற்படுத்துவதால் அது பொது ஜன விரோதி. 4) நாங்கள் இரு பாலரும் சுதந்திரமானவர்கள்.

ஏன் அவ்வாறு கூறுகிறார்கள்?

மேலை நாட்டினர் அனைவருமே முதலாளித்துவ கொள்கையைக் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மிக அதிகமான தேவைக்கு அப்பாற்பட்ட பொருட்களை விற்கக் கூடிய சந்தைகளை நாடிக் கொண்டேயிருந்தார்கள். தற்சமயம் கீழ் திசை மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் பொருளாதாரம் வளம் பெற்று மக்களிடம் செல்வம் பெருகிவிட்டன. அச்செல்வத்தின் கொள்ளையடிக்கும் பொருட்டு உலக வர்த்தகக் கழகம் தாராளம் பொருளாதாரக் கொள்கை, உரிமை பதிவுகள் (Patent Registration) என்று பலவகையில் இவ்வகை நாடுகள் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த முனைகின்றன.

பர்தா என்ற கேடயம் இங்கேதான் அவர்களை தடுக்கின்றது. பர்தா அணிந்த பெண்ணுக்கு தேவைகள் மிகக் குறைவு. அவளை (ளிபரல்) சுதந்திரமானவளாக ஆக்கிவிட்டால். 1) நவ நாகரீக உடைகள் விற்பனை. 2) காலனிகள் விற்பனை. 3) அழகு சாதப் பொருட்கள் விற்பனை. 4) ஃபேஷன் ஷோ என்றெல்லாம் அலைக்கழிக்கலாம். "பெரும் இலாபத்தினை அடையத் துடிக்கும் பொருளாதார ஆதிக்க சக்திகள் தாங்கள் அடிப்படையில் சார்ந்திருக்கும் உழைக்கும் வர்க்கத்தினைச் சுரண்டும்" ஒரு இனப் போராட்டம் தான் இந்த பர்தா போராட்டம்.

அதே பர்தாவை முஸ்லிம்கள்:
"பொருளாதார, அரசியல் கலாச்சார திணிப்பை அடுத்த நாடுகளின் மீது திணிக்க அயராது முற்படும் மேற்கத்திய உலகின் முயற்சியை" அஹிம்ஸை முறையில் எதிர்கொள்ளும் கேடயம்தான் ''பர்தா'' என்று கூறுகிறார்கள்.
மேலை நாட்டினர் தங்களின் நெறிகெட்ட கலாச்சாரத்தை ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் திணித்து அதன் மூலமாக அந்நாடுகளின் கலாச்சார மனோ பலத்தை சின்னா பின்னமாக்கி தங்களின் பொருட்களுக்கு சந்தையைக்காணவே. நடந்து முடிந்த இரு போர்களும் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் விழுங்கிய பின்னும் அவர்கள் அறிவித்த முதல் கொள்கை பெண்கள் சுதந்திரம் (Lifting of Hijab) ஹிஜாபை விடுவித்தல். முஸ்லிம்களின் கலாச்சாரத்தை, மனோபலத்தை சீரழிக்க வேண்டுமா? பர்தாவை கழற்று.

பர்தா என்பது:
பொருளாதார ஏற்றத்தாழ்வு, இனப்பாகுப்பாடு இரண்டையும் உடைத்தெறிந்து அவளுக்கு ஒரு "உன்னதமான பாதுகாப்பு" என்ற நிலையைக் கொடுப்பது, நாங்கள் வசிக்குமிடம் பொருளாதார வசதியற்றதாக, சுகாதாரமற்றதாக இருந்தாலும் "நாங்கள் உங்களுக்கு சுலபமாக வசப்படும் பறவைகள் அல்ல" என்று பறைசாற்றும் கேடயமே பர்தாவாகும்.

நன்றி: இஸ்லாம்கல்வி.காம்