Pages

20 December 2005

விரும்பி இஸ்லாத்தைத் ஏற்கும் ஜெர்மன் பெண்கள்!

ப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வருடம் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

சுவாரசியமான விஷயம் இதில் என்னவென்றால் இஸ்லாத்தை தழுவியுள்ள 1000க்கும் மேற்பட்டோரில் பெண்களே அதிகம் என்பதுதான்.

ஜெர்மனியின் Berliner Zeitung பத்திரிகை மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இப்பெண்களின் கணவன்மார்கள் பிற சமயத்தினராய் இருந்தும்கூட இஸ்லாத்தின் கோட்பாடுகளால் கவரப்பட்டு ஏற்றுக்கொண்டவர்கள் என்பதும் பெரும்பாலான பெண்கள் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

32 இலட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் ஜெர்மனியில் 14,352 பேர் ஜெர்மானிய வம்சாவழியினராவர் என்பதும் ஒரு துணைச்செய்தி!

19 December 2005

இஸ்லாத்தின்-பால் அமெரிக்கப் பெண்கள்

பெற்றோர்களின் மத நம்பிக்கை அவர்களின் ஆன்மீக எதிர்பார்ப்பை நிறைவேற்றாதாலும் வரும் கேள்வி அறிவுக்கு புராதன நம்பிக்கைகள் ஈடு கொடுக்க முடியாததாலும் அமெரிக்காவில் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகிறது,சமீபத்தில் அமெரிக்கா இஸ்லாமியக் கவுன்சில் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது. தேசிய அளவில் அமெரிக்காவில் உள்ள கிரேட்டர்போஸ்டன் முஸ்லிம் சமூகத்தில் பெண்களே மூன்றில் இரு பங்காக இருக்கிறனர்.

இஸ்லாத்தின் பக்கம் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதால் புதிர் இருப்பதாக அப் பெண்களின் குடும்பத்தார் கருதுகின்றனர். எந்த ஒரு சமயம் பெண்களை அடிமைபடுத்தி அடக்கி ஆள்கிறது என்று உருவகப்படுத்திக் காட்டப்படுகிறதோ அந்த மதத்தை நோக்கிப் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது, ஆனால் புதிதாக இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம் பெண்கள் ஒரு சேர அக்குற்றச் சாட்டை மறுக்கின்றனர். பிரச்சார நோக்கத்துடன் இஸ்லாத்தின் மீது பொய்யான தோற்றத்தை உருவகப்படுத்திக் காட்டப் படுகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக சொத்துரிமை வாரிசுரிமை ஆகிய உரிமைகளை மேலை நாட்டு கலாச்சாரம் பெண்களுக்குக் கொடுப்பதற்;கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாத்தை தழுவும் வெள்ளை கிறிஸ்துவப் பெண்கள் வாழ்க்கையில் இஸ்லாம் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இப்புதிய முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் என்னும் தலைதுண்டினால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அணியும் ஆடையிலும் வித்தியாசம் தெரிகிறது, கவர்ச்சி ஆடையை அவர்கள் வெறுக்கிறார்கள.

நீண்ட தொளதொளப்பான ஆடையை அணிகின்றனர். அது அவர்களின் ஒழுக்க மாண்பை கூட்டிக்காட்டுகிறது. அவர்களின் உணவுப்பழக்கமும், இஸ்லாமிய விதிமுறைக்கு மாறுகிறது. பன்றி மாமிசத்தை அவர்கள் தொடுவதில்லை. புகைப்பது இல்லை. குடிப்பழக்கத்துக்கு அவர்கள் முழுக்குப் போடுகிறார்கள். அவர்களின் ஆன்மீகப்பாதை ஐங்காலத் தொழுகை இடம் பிடித்துக் கொள்கிறது. இஸ்லாத்தை ஏற்றதும் அவர்கள் புதுப்பொழிவுடன் புதிய மனிதர்களாக உள்ளும் புறமும் மாற்றமடைகின்றனர். அவ்வாறு மாற்றமடைந்த பெண்கள் சிலரின் தகவல்களைத் திரட்டி கிழே தருகிறோம்:

கிரேஜினோ கிரேட்டர், போஸ்டனில் உள்ள ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர், அவரின் தந்தை நம்பிக்கை இழந்து விட்ட கத்தோலிக்கர், தாயோ விறுவிறுப்பான பெந்த கொஸ்ட். கிறிஸ்துவ சமயப் பற்றுக் கிடையே கிரேஜினோ அலைகழிக்கப்பட்டார். சந்தோஷமும் குழப்பமும் அவர் மனதில் குடிகொண்டிருந்தது அப்பொது அவருக்கு வயது 14. வெல்ஸலி ஜூனியர் கல்லூரியின் மாணவி, குழப்பத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு உலக மதங்களை ஆராய முற்பட்டார். புத்தம், ஹிந்து, யூதம், மற்றும் இஸ்லாம் ஆகியவைகளை ஆழ்ந்து படித்தார். முடிவில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாம்தான் தனது தாயின் கிறிஸ்துவத்தை விடவும் உண்மையை ஒங்கி ஒலிக்கிறது என்று நம்புகிறார். கடந்த மார்ச் 8-ம் தேதி போஸ்டனில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்வைத்தவிர வணக்கத்துக்குரிய கடவுள் யாருமில்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்,, என்று ஷஹாதத் (இஸ்லாமிய உறுதி மொழி) சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.

கிறிஸ்துவச் சமயம் வாரம் ஒரு முறை சர்ச்சுக்குப் போவதும் ஒரு நல்ல மனிதராக இருப்பதும் மட்டுமே. ஆனால் இஸ்லாம் ஒரு முழு வாழ்க்கை நெறி என்று அவர் கூறிகிறார். மகளின் மனமாற்றம் அவரது தந்தைக்கு அடங்காக் கோபத்தை ஏற்படுத்தியது, உனக்கு ஒரு நல்ல வேலையோ அல்லது நல்ல கணவனோ கிடைக்காது, என்று அவர் வருந்துகிறார். அவரது தாய் அழுது தவித்து ஏசுவை துணைக்கு அழைக்கிறார். வசந்த கால விடுமுறையில் வீட்டிற்குப் போன கிரேஜினோவிற்கு நல்ல வரவேற்பு இல்லை. அவரது தந்தை, ஹிஜாப் அணிந்த அவரை பார்க்க சகிக்காமல் தனது மற்ற குழந்தைகளையும் அவரோடு பழக விடாமல் தடுக்கிறார். ஆனால் இஸ்லாம் குடும்ப உறவு முறையை பேணிக் கொள்ள அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் கிரேஜினோ தமது உறவுகளைக் குடும்பத்துடன் புதுப்பித்துக்கொள்ள இன்னும் முயற்சி செய்து வருகிறார், ஆனால் அது கடினமானதாக அவருக்கு தெரிகிறது. ஏனெனில் அவரது தந்தை கல்லூரிக்கு கட்டவேண்டிய கட்டணத்தை கட்டுவதை நிறுத்தி விட்டார்.

இருப்பினும் கிரேஜினோ ஹிஜாப் அணிவது தம்மை பல சங்கடங்களிலிருந்து விடுவிக்கிறதென்று கூறுகிறார். சுருள்சுருளான இடுப்பு வரை நீண்ட அழகிய தலைமுடி அவருக்குண்டு. ஹிஜாப் அணியாத காலங்களில் துடுக்குதனம் கொண்டோரை சந்திக்க நேரும் போது அவர்களில் சிலர் நெருங்கி வந்து, இந்த அழகிய கூந்தலை நான் தொடலாமா? என்று தன்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்று கூறுகிறார். இப்பொது ஹிஜாப் அணிவது தம்மை இப்படிப் பட்ட இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று சொல்கிறார். இப்போது தன்னை யாரும் உற்று நோக்குவதில்லை. உடல் அழகையோ, உருவ அமைப்பையோ, கூந்தல் அலாங்காரத்தையோ யாரும் நினைத்துப் பாhப்;பதில்லை. குறும்புத்தனம் செய்பவர் கண்ணுக்கு நாம் தெரிவதில்லை என்று கிரேஜியானோ கூறுகிறார்.

மற்றுமொரு பெண்மணி கிறிஸ்டினா சபியா டோபியாஸ்நாகி. அவர் சாமர்வில்லாவைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ஒரு கத்தோலிக்கர். தாய் ஒரு யூதர். ஆனால் அவர் யூத மதக்கோட்பாடுளை கடைபிடிப்பதில்லை. சபியாவுக்கு வயது முப்பது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் இஸ்லாத்தை தழுவினார்.

மேலைநாடுகளில் கடைபிடிக்கப்படும் இஸ்லாம் இலட்சியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது, இங்கு நாம் எப்படி இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறோம் என்பதை பல நாடுகள் அக்கறையுடன் கவனித்து வருகிறன்றன. அந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் சரியான உதாரணமாக அமையலாம். ஏனெனில் உலகில் வேறு நிலப்பரப்புகளை விடவும் அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான சமத்துவ ஒருமைப்பாடு கொண்ட இஸ்லாமியக் கலாச்சாரம் அவர்களுக்கு சிறந்த முன் மாதிரியாகத் திகழும் திறம் படைத்தது. அது உலக அளவில் முஸ்லிம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்று சபியா கூறுகிறார்.

மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல் வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.
ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி, கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்;.

லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன். நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவ்வாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது.

நன்றி: தமிழ்முஸ்லிம்.காம்

இஸ்லாமிய பெண் வீரர் - ஒரு சிறு பயோடேட்டா!

Image hosted by TinyPic.com


பெயர்: லிதா ஃபரிமான்

நாடு: ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி

திறமை: ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் வென்றவர்.

நம்பிக்கை: 5 வேளை தொழுகைகளையும் நேரம் தவறாமல் தொழக்கூடியவர். பயிற்சி களம் முதல் போட்டி மைதானம் வரை இஸ்லாமிய ஹிஜாப் முறைப்படியிலான உடையணிவதில் விருப்பம் கொண்டவர்.

தனிப்பட்ட கருத்து: எங்கள் நாட்டில் விளையாட்டில் ஆண்களுக்குள்ள எல்லா வாய்ப்புகளும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

11 December 2005

ஹிஜாப் : அடக்குமுறைச் சின்னமல்ல

கனடாவிலேயே பிறந்த வளர்ந்த இந்த முஸ்லிம் பெண்மணி, பாரம்பர்யமிக்க ஹிஜாப் உடையை அணிய முடிவெடுத்துக் கொண்டார். அவர் ஹிஜாபை அணிவதைப் பார்த்த மக்கள் அவரை ஒரு தீவிரவாதியாக அல்லது அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட பெண்மணியாகப் பார்க்கின்ற அதேவேளையில், அவர் தன்னுடைய விடுதலையே இதில் தான் இருக்கின்றது என்று உணர்கின்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது, என்னுடைய ஆடைக்குள் ஏகே 47 ரக துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவது போல, ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போலப் பார்க்கின்றார்கள். அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்ப்பது போல, சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி விளம்பரத்தைப் பார்ப்பது போல வெறித்துப் பார்க்கின்றார்கள். அவர் என்னை எந்தவிதமாகப் பார்க்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நானறிய மாட்டேன்.

என்னை முழுவதுமாக அவர்கள் ஒருவிதமாகப் பார்க்கின்றார்கள், வெறித்த பார்வையுடன், இன்னும் திருட்டுப் பார்வையுடன். நீங்கள் பார்ப்பது.., நான் ஹிஜாபை அணிந்திருக்கின்றேன், எனது தலையை தலைத்துண்டால் மறைத்திருக்கின்றேன், இன்னும் கழுத்தை, மற்றும் தொண்டைக் குழியையும் மறைத்திருக்கின்றேன். இதனை நான் ஏன் அணிகின்றேன் என்றால்.., நான் ஒரு முஸ்லிம்.., எனது உடம்பு என்பது எனக்கு மட்டுமே சொந்தமானது.., என்று நம்பக் கூடிய சமுதாயத்தைச் சேர்ந்தவள்.., பிறருக்கு காட்சிப் படுத்துவதற்காக எனது உடம்பை திறந்து போட்டுத் திரிகின்ற சமுதாயப் பெண்ணல்ல..!

இன்றைக்கு இளம் வயதுப் பெண்கள் ஹிஜாப் அணிவதன் பக்கம் மீண்டு வருகின்றார்கள், அது அவர்களது உண்மையான நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றது - எனது உடம்புக்கு நானே சொந்தக்காரி என்றும், இன்னும் அது தனது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்ற உயர்ந்த நோக்கத்தின் கீழ் அதனை அணிவதன் மூலம் வெளிப்படுத்துகின்றார்கள்.

திருமறைக்குர்ஆனானது ஆணும், பெண்ணும் சமமே என்று கூறுகின்றது, ஒரு தனிமனிதனை அவன் சார்ந்திருக்கின்ற பாலினம், அழகு, செல்வம் அல்லது தகுதியைக் கொண்டு தீர்மானிக்க முடியாது. அதாவது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விடச் சிறந்தவன் என்று அளப்பதற்குரிய ஒரே அளவு கோள்.., அவனது குணநலன்கள் தான்.

இதுவன்றி.., நான் ஹிஜாப் அணிவதைப் பார்த்து இந்த மக்கள் என்னை பார்த்து மிகவும் சங்கடப்படுகின்றார்கள். எல்லா வற்றிலும்.., நானோ மிக இளவதுடையவள்.., கனடாவில் பிறந்தவள்.., அங்கேயே வளர்ந்தவள்.., கல்லூரிப் பட்டாதாரி -- இவ்வளவு இருந்தும் இதனை நீ ஏன் செய்கின்றாய்.., என்று என்னை அவர்கள் கேட்கின்றார்கள்.

முன்பின் அறியாத சிலர் சப்தமாக அதேவேளையில் மிகவும் நிதானமாக ஆங்கில மொழியில் நான் நடமாடும் தேர் போன்று இருப்பதாக என்னிடம் பேசுகின்றார்கள். இந்த உடையை உடுத்திக் கொண்டு கனடாவில் நான் வாழ்வது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகக் கூறுகின்றார்கள், அவர்கள் என்னிடம் கேட்கும் நேரம் என்னுடைய மனநிலை சரியாக இருக்கும்பட்சத்தில்.., அது ஒரு வேடிக்கையாகவே எனக்கு இருக்கும்.

ஆனால்.., வட அமெரிக்கச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவளும் இன்னும் அவளது வாழ்வுக்கான முன்னேற்றப் பாதைகள் பல அவள் முன் இருந்தும்.., அந்த 21 வயதில்.., அவை அனைத்தையும் அனுபவிக்க வேண்டியவள்.., தான் விரும்பக் கூடிய ஆடையை அணிந்து அதன் மேலாக தன்னை மூடிக் கொள்ள விரும்புகின்றாளே.., ஹிஜாப் என்ற உடையை அணிந்து, இன்னும் முகத்தையும், கைகளையும் மட்டுமே அவள் வெளிக் காண்பிக்கக் கூடியவளாகி விட்டாளே ஏன்?

ஏனென்றால்.., அது எனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கின்றது..!
சிறு வயதுக் குழந்தைகளில் கற்றுக் கொடுக்கப்பட்டது என்னவென்றால்.., அவர்களது தகுதி என்பதே அவர்கள் தங்களைக் கவர்ச்சிப் பொருளாக ஆக்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது என்பதைத் தான். பிறரைக் கவர வேண்டும் என்பதற்காகவே தங்களை அலங்கரித்துக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றோம் என்பதை நாங்கள் உணர்கின்றோம்.., இத்தகைய செயல்கள் பிரயோஜனமற்றவை என்பதையும் அரைகுறையாக
இத்தகைய செயல்பாடுகளை தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அடக்குமுறையாகக் கருதுகின்ற பெண்கள் நகைப்புக்கும் வெறுப்புக்கும் உரியவர்களாகக் கருதப்படுகின்றார்கள். அத்தகைய பெண்கள் செயற்கையான அலங்காரங்களைத் தவிர்க்கின்றார்கள்.., தங்களது கால்களில் உள்ள முடிகளை மழித்து கொள்வதில்லை அல்லது தங்களது உடம்பை திறந்து போட்டும் திரிவதில்லை.., இத்தகைய பெண்களை சமூகத்தில் உள்ள ஆண்களும், பெண்களும்.., பிரச்னைக்குரியவர்களாகக் கருதி அவர்களை நடத்துகின்றார்கள்.

நன்றி: ஏ1ரியலிஸம்.காம்

அமெரிக்கா : பாலியல் பலாத்காரங்கள்

பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் :
ஆண்களும் பெண்களும் கலந்து பணியாற்றும் இடங்கள் எதுவாக இருப்பினும் அவற்றில் 40-70 சதவீதப் பெண்களும், 10-20 சதவீத ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள (Equal Employment Opportunity Commission (EEOC) கமிஷனிடம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் வழக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று குற்றம் சாட்டும் ஆண்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இப்பொழுது மும்மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது இந்த அமைப்பு. சமீபகாலமாக, பணியிடங்களில் தங்களின் மேலதிகாரிகளாக வேலைபார்க்கும் பெண்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று 11 சதவீத வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

1999 ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் 62 சதவீத கம்பெனிகள் தங்களது தொழிலாளர்களுக்கு பாலியல் பலாத்காரத்தினை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பதற்கான பயிற்சியை வழங்கி இருக்கின்றன. இதில் 97 சதவீதக் கம்பெனிகள் பாலியல் பலாத்காரத்தினை எதிர்கொள்வது குறித்த கொள்கையை வகுத்து வைத்துள்ளன.

லூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது. அதில்,
பணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.


7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,
62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்
இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும்
59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்
41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்
பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :
43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்
8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.


கல்விக் கூடங்களில் :

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :

85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்
18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்
13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்
அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,
25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்
10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றத
அமெரிக்காவில் உள்ள American Psychological Association என்ற அமைப்பு பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்
12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்
21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்
11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்
3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள Minnesota high school students (reported by Susan Strauss, Sexual Harassment and Teens) அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :
பள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்
இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்
50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.

நன்றி: தமிழ் இஸ்லாம்.காம்

10 December 2005

உடை ஒரு தடையா?

சமீபத்தில் தமிழ்மணத்தில் ஒரு பதிவில் சானியா மிர்ஜாவின் உடை அணிதலைப் பற்றி கருத்து தெரிவித்திருந்த மல்லிகை-மணம் வலைப்பதிவாளருக்கு, கருத்துக்கள் கடல்போல் குவிந்தது. ஒரு பெண் வலைப்பதிவாளரோ ஒருபடி மேலேபோய் இதுபற்றி தனிப்பதிவே போட்டுவிட்டு பின்னர் பின்னூட்டப் பிரச்னைகளால் வருத்தப்பட்டார்.

கொழுவி என்பவரோ இதை அபத்தம் என்றதோடு நில்லாமல் "100 m. ஓட்டப் பந்தயத்துக்கு இப்படி மூடிக்கட்டிக்கொண்டு ஓடி ஒருவரால் வெல்ல முடியுமென்று யாராவது சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? வேண்டுமானால் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்கள், அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்கு இவ்வுடைப்பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எல்லா விளையாட்டுக்களுக்கும் அது பொருந்துமென்பது கேலிக்கூத்து" என்றார்.

அத்தோடு நின்றாரா என்றால் இல்லை. "இதை மறுத்துரைக்க வந்த பர்வீன் கூட கிரிக்கெட்டையும் டெனிசையும்தான் ஒப்பிட முடிந்தது. உயரம் பாய்தலையும் அதையும் ஒப்பிட முடியவில்லை." என்று பெரும்போடு போட்டார்.

Babble என்பவரோ நக்கலாக "மேலே உள்ள படங்களில், அவர்கள் வெற்றி பெற்றார்களா என்று குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்" என்றார்.
அத்தி பூத்தார்போல் ஆதரித்து எழுதிய மு.மயூரன் "முதலாளிய ஊடகங்களால் மிகைப்படுத்தப்படும் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்களின் உடைபற்றிய எனது அவதானிப்பில்,பெரும்பாலும் அது தமது உடற்பகுதிகளை வெளிப்படுத்தி அதன்மூலம் சில நலன்களை பெறுவதற்கானதாகவே இருக்கிறது" என்றார்.

சரி விஷயத்திற்கு வருவோம்! மேலேலேலே கண்ட பின்னூட்டங்களுக்குப் பதிலே இப்பதிவு. வளைகுடா நாடுகளில் ஒன்றான (தோஹா) கத்தரில் 2006 ல் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப்போட்டி-களுக்கான வெள்ளோட்டமாக, பிரம்மாண்டமான முறையில் நடந்து வரும் 3வது மேற்கு ஆசிய விளையாட்டுப்போட்டி-களின் முடிவுகள் இன்று (அதாவது டிசம்பர்-10, 2005) வெளியாகி உள்ளது.

கலந்து கொண்டவை மேற்காசிய நாடுகள் என்பதால் போட்டிகளில் இஸ்லாமிய உடையணிந்த பெண்களை விட, சாதாரண உடையணிந்து கலந்து கொண்டவர்கள் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடலை மறைக்கும் உடையணிந்து விளையாட்டில் வெற்றி பெற முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும்முகமாக வெற்றி பெற்ற இஸ்லாமிய பெண்களில் சிலரின் விபரங்கள் கீழே:



உயரம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈரானைச் சேர்ந்த நபிஸாதிக் ஃபர்த்ஸ்

*********

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த பஹ்ரைனைச் சேர்ந்த பெண் வீராங்கனை ரோக்யா அல் கஸாரி.

மேலும் காண்க:

ஈரான் காவல்துறையில் பெண்கள்

Sports & Hijab

இஸ்லாம் ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளை பெண்களுக்கு (குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில்)கொடுத்தாலும் பெண்களின் உடலமைப்பைப் கணக்கில் கொண்டு உடையளவில் மாற்றம் ஏற்படுத்துகிறது. கண்ணியத்திற்காக உள்ள உடைக்கட்டுப்பாடுகளினால் இப்போது எதில் பின்னடைவு வந்துவிட்டது? என்று இவர்கள் பட்டியலிடுவார்களா? எந்த ஒரு உலக வாழ்க்கை நெறியிலும் கூறப்படாத பெண் சமத்துவத்தை இஸ்லாம் கொடுக்கும்போது, பெண்ணுரிமை பேசுவதாக எண்ணிக்கொண்டு கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?

சிறந்த வலைப்பூக்களுக்கான (Weblog Award) இறுதிகட்ட சுற்றில் வெற்றி பெற்ற அமெரிக்கப்பெண்மணி ஒருவரின் இது தொடர்பான கருத்து: