Pages

16 October 2007

கண்ணியம் கொடுத்த ஹிஜாப்! - ஸாரா போக்கர்

சுதந்திரம் பற்றிப் பேசிப்பேசி அதன் எல்லை எதுவென்பதை ஒவ்வொரு முறையும் வரையறுத்து பின் அதை அறுத்து பின் புதிதாய் வரையறுத்து மனித மனம் எங்கோ தேடி அலைந்து கொண்டிருக்கிறது. மனிதனைப் படைத்த இறைவனே, மனித உள்ளங்களில் ஓடக்கூடிய உணர்வுகளை அறிவதில் வல்லவன். இறைவசனங்களின் மூலம் இஸ்லாம் பெண்ணுக்கு வலியுறுத்தக்கூடிய உடை அளவிலான கட்டுப்பாட்டை, அவளின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்பதாக ஒரு சாரார் பேசிக்கொண்டிருந்தாலும் பேசுபவர் ஒவ்வொருவரும் தத்தம் அளவிலான உடைக் கட்டுப்பாடுகளை தத்தம் கலாச்சாரச் சூழல்களுக்கு ஏற்றபடி அளவுகோலை வைத்துள்ளனர் என்பதே யதார்த்தமாகும்! அதை மீறும்போது அதன் மூலம் ஆபத்துக்களையும், கலாச்சாரச் சீரழிவுகளையும் சந்திக்கின்றனர். அத்தகைய தேடல்களின் ஓட்டத்தில் சுதந்திர வேட்கையின் உச்சத்திற்குச் சென்று திரும்பியுள்ள ஒரு பெண்ணின் பேட்டி இங்கே, ஆடையில் சுதந்திரம் வேண்டும் என்று கேட்போரின் கவனத்திற்காக முன்வைக்கப்படுகிறது.

- அபூ ஸாலிஹா