Pages

11 December 2005

ஹிஜாப் : அடக்குமுறைச் சின்னமல்ல

கனடாவிலேயே பிறந்த வளர்ந்த இந்த முஸ்லிம் பெண்மணி, பாரம்பர்யமிக்க ஹிஜாப் உடையை அணிய முடிவெடுத்துக் கொண்டார். அவர் ஹிஜாபை அணிவதைப் பார்த்த மக்கள் அவரை ஒரு தீவிரவாதியாக அல்லது அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட பெண்மணியாகப் பார்க்கின்ற அதேவேளையில், அவர் தன்னுடைய விடுதலையே இதில் தான் இருக்கின்றது என்று உணர்கின்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது, என்னுடைய ஆடைக்குள் ஏகே 47 ரக துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவது போல, ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போலப் பார்க்கின்றார்கள். அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்ப்பது போல, சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி விளம்பரத்தைப் பார்ப்பது போல வெறித்துப் பார்க்கின்றார்கள். அவர் என்னை எந்தவிதமாகப் பார்க்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நானறிய மாட்டேன்.

என்னை முழுவதுமாக அவர்கள் ஒருவிதமாகப் பார்க்கின்றார்கள், வெறித்த பார்வையுடன், இன்னும் திருட்டுப் பார்வையுடன். நீங்கள் பார்ப்பது.., நான் ஹிஜாபை அணிந்திருக்கின்றேன், எனது தலையை தலைத்துண்டால் மறைத்திருக்கின்றேன், இன்னும் கழுத்தை, மற்றும் தொண்டைக் குழியையும் மறைத்திருக்கின்றேன். இதனை நான் ஏன் அணிகின்றேன் என்றால்.., நான் ஒரு முஸ்லிம்.., எனது உடம்பு என்பது எனக்கு மட்டுமே சொந்தமானது.., என்று நம்பக் கூடிய சமுதாயத்தைச் சேர்ந்தவள்.., பிறருக்கு காட்சிப் படுத்துவதற்காக எனது உடம்பை திறந்து போட்டுத் திரிகின்ற சமுதாயப் பெண்ணல்ல..!

இன்றைக்கு இளம் வயதுப் பெண்கள் ஹிஜாப் அணிவதன் பக்கம் மீண்டு வருகின்றார்கள், அது அவர்களது உண்மையான நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றது - எனது உடம்புக்கு நானே சொந்தக்காரி என்றும், இன்னும் அது தனது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்ற உயர்ந்த நோக்கத்தின் கீழ் அதனை அணிவதன் மூலம் வெளிப்படுத்துகின்றார்கள்.

திருமறைக்குர்ஆனானது ஆணும், பெண்ணும் சமமே என்று கூறுகின்றது, ஒரு தனிமனிதனை அவன் சார்ந்திருக்கின்ற பாலினம், அழகு, செல்வம் அல்லது தகுதியைக் கொண்டு தீர்மானிக்க முடியாது. அதாவது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விடச் சிறந்தவன் என்று அளப்பதற்குரிய ஒரே அளவு கோள்.., அவனது குணநலன்கள் தான்.

இதுவன்றி.., நான் ஹிஜாப் அணிவதைப் பார்த்து இந்த மக்கள் என்னை பார்த்து மிகவும் சங்கடப்படுகின்றார்கள். எல்லா வற்றிலும்.., நானோ மிக இளவதுடையவள்.., கனடாவில் பிறந்தவள்.., அங்கேயே வளர்ந்தவள்.., கல்லூரிப் பட்டாதாரி -- இவ்வளவு இருந்தும் இதனை நீ ஏன் செய்கின்றாய்.., என்று என்னை அவர்கள் கேட்கின்றார்கள்.

முன்பின் அறியாத சிலர் சப்தமாக அதேவேளையில் மிகவும் நிதானமாக ஆங்கில மொழியில் நான் நடமாடும் தேர் போன்று இருப்பதாக என்னிடம் பேசுகின்றார்கள். இந்த உடையை உடுத்திக் கொண்டு கனடாவில் நான் வாழ்வது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகக் கூறுகின்றார்கள், அவர்கள் என்னிடம் கேட்கும் நேரம் என்னுடைய மனநிலை சரியாக இருக்கும்பட்சத்தில்.., அது ஒரு வேடிக்கையாகவே எனக்கு இருக்கும்.

ஆனால்.., வட அமெரிக்கச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவளும் இன்னும் அவளது வாழ்வுக்கான முன்னேற்றப் பாதைகள் பல அவள் முன் இருந்தும்.., அந்த 21 வயதில்.., அவை அனைத்தையும் அனுபவிக்க வேண்டியவள்.., தான் விரும்பக் கூடிய ஆடையை அணிந்து அதன் மேலாக தன்னை மூடிக் கொள்ள விரும்புகின்றாளே.., ஹிஜாப் என்ற உடையை அணிந்து, இன்னும் முகத்தையும், கைகளையும் மட்டுமே அவள் வெளிக் காண்பிக்கக் கூடியவளாகி விட்டாளே ஏன்?

ஏனென்றால்.., அது எனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கின்றது..!
சிறு வயதுக் குழந்தைகளில் கற்றுக் கொடுக்கப்பட்டது என்னவென்றால்.., அவர்களது தகுதி என்பதே அவர்கள் தங்களைக் கவர்ச்சிப் பொருளாக ஆக்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது என்பதைத் தான். பிறரைக் கவர வேண்டும் என்பதற்காகவே தங்களை அலங்கரித்துக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றோம் என்பதை நாங்கள் உணர்கின்றோம்.., இத்தகைய செயல்கள் பிரயோஜனமற்றவை என்பதையும் அரைகுறையாக
இத்தகைய செயல்பாடுகளை தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அடக்குமுறையாகக் கருதுகின்ற பெண்கள் நகைப்புக்கும் வெறுப்புக்கும் உரியவர்களாகக் கருதப்படுகின்றார்கள். அத்தகைய பெண்கள் செயற்கையான அலங்காரங்களைத் தவிர்க்கின்றார்கள்.., தங்களது கால்களில் உள்ள முடிகளை மழித்து கொள்வதில்லை அல்லது தங்களது உடம்பை திறந்து போட்டும் திரிவதில்லை.., இத்தகைய பெண்களை சமூகத்தில் உள்ள ஆண்களும், பெண்களும்.., பிரச்னைக்குரியவர்களாகக் கருதி அவர்களை நடத்துகின்றார்கள்.

நன்றி: ஏ1ரியலிஸம்.காம்

No comments: