சாதனை படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்
 சாதனை படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண் 
ஹிஜாப் பெண்களைச் செயலிழக்கச் செய்கிறது,  அவர்களது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது போன்ற அரதப் பழசான எதிர்மறைச்  சிந்தனைகள் இத்தகைய செய்திகள் மூலம் தகர்த்தெறியப் படுகின்றன.
 கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு  (23)  உலகப்புகழ்பெற்ற  லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார்.  இக்கல்லூரியில் Expression Profiling in Cancer துறையில் உயர்கல்வி பயில உள்ளார். (முழு  விபரங்களை இங்கே காணலாம் :   http://www.a-star.edu.sg/graduate_academy_and_scholarships/192-A-STAR-Graduate-Scholars)
திருமதி ஷகீலா,  "ஏ ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின்  (Agency for Science, Technology And Research)இந்த ஆண்டுக்கான உபகா
 தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப்  (Honours) பெற்ற ஷகீலா,  "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு.  'இளமையில் கல்' என்பதுதான் அவர் கணவர் முஹம்மத்  இத்ரீஸின்  அறிவுரை. இவர், மில்லேனியா கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார்.
 "வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பு மட்டும் போதாது.  எதிர்காலத்திற்காகத்  திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும்!" என்பதே சகோதரி  ஷகீலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. "லட்சியத்துடன் வாழ்க்கையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!" என்று உறுதியுடன் சகோதரி  ஷகீலா கூறுகிறார்.
 வாழ்வில் சிறக்க  ஹிஜாப் ஒரு தடையில்லை என்ற கூற்றை மீண்டும் இங்கே நிரூபித்துள்ள  இந்தச்  சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
 சுட்டிகள்: 
 

 

 
 
 
No comments:
Post a Comment