நாங்கள் அணிந்தால் மட்டும்...?
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத்
திரையிடச் சொல்வதுப் பிழையா!
பதிந்தது
அபூ ஸாலிஹா
at
Monday, April 11, 2011
0
கருத்துக்கள்
பதிந்தது
அபூ ஸாலிஹா
at
Sunday, April 10, 2011
0
கருத்துக்கள்
பதிந்தது
அபூ ஸாலிஹா
at
Saturday, June 05, 2010
2
கருத்துக்கள்
கடந்த 2009 ஆம் ஆண்டுக்கான கட்டிடக்கலைப் பிரிவில் ஐந்தாண்டு பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேறியுள்ளார் சகோதரி ஆயிஷா!
பதிந்தது
அபூ ஸாலிஹா
at
Monday, March 01, 2010
0
கருத்துக்கள்
இது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஹிஜாப் முறையை விரும்பிப் பின்பற்றும் பெண்கள், சமூகத்தில் தினந்தோறும் சந்திக்கும் பிரச்னைகளைக் குறித்த ஓர் உரையாடல்! இவ்வாக்கத்தை தமது தளத்தில் பதிக்க அனுமதி அளித்த சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு எனது நன்றி!
பதிந்தது
அபூ ஸாலிஹா
at
Wednesday, April 04, 2007
1 கருத்துக்கள்
ஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்
தடையை எதிர்த்து வழக்குப்போட்டு வெற்றி பெற்றார்
ஆர்ம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்த முஸ்லிம் பெண், ஆண்களின் கைகளை குலுக்க மறுத்து விட்டார். இதனால் பயிற்சிக் கல்லூரி அவரைச் சேர்ப்பதற்கு தடை விதித்து விட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அவர் அதில் வெற்றி பெற்றார்.
20 வயது பாத்திமா
நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் பெண் பாத்திமா அம்கர். 20 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேருவதற்காக மனு செய்து இருந்தார்.இதற்கான நேர்முகத்தேர்வுக்கு அவர் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரை நேர்முகத் தேர்வு செய்ய இருந்த ஆசிரியர்கள் கைகுலுக்குவதற்காக கையை நீட்டியபோது கைகொடுக்க மறுத்து விட்டார்.
மதக்கட்டுப்பாடு
12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுடன் எந்தவிதமான ஸ்பரிசத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய மதக் கட்டுப்பாடு என்று பாத்திமா அதற்கு விளக்கமும் கொடுத்தார்.
இதை கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. கைகுலுக்குவது டச்சு சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரியாதை தெரிவிக்கும் அடையாளம் ஆகும் என்று கூறிய நிர்வாகம், அவரைச் சேர்ப்பதற்கு தடைவிதித்தது.
கோர்ட்டில் வழக்கு
இதை எதிர்த்து பாத்திமா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சமமாக நடத்தும் கமிஷன் தடை விதித்ததன் மூலம் பாத்திமாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்று கூறி பாத்திமாவை கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டு உள்ளது.
ஒதுக்கும் ஆபத்து
முஸ்லிம்களின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமுதாயத்தில் இருந்து முஸ்லிம் பெண்களை ஒதுக்கி வைக்கும் ஆபத்தை கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி விடும் என்றும் கமிஷன் எச்சரித்தது.
இதே கமிஷன் தான் கடந்த ஆண்டு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வர மறுத்த முஸ்லிம் பெண் சமீராவை ஆசிரியராகச் சேர்க்க மறுத்த இஸ்லாமிய பள்ளிக்கூடத்துக்கு எதிராக தீர்ப்பு கூறியது.
இது தொடர்பான ஆங்கிலச் செய்திகளுக்கு:
இஸ்லாம் ஆன் லைன்.காம்
யாஹூ செய்திகள்
ஸ்விஸ் பாலிடிக்ஸ்
பதிந்தது
அபூ ஸாலிஹா
at
Wednesday, March 29, 2006
2
கருத்துக்கள்
இராணுவத்தில் ஹிஜாபுடன் பெண்கள்
---------------------------------------------------------------
துப்பாக்கிச் சுடும் போட்டியில் - நஸீமா
மலை ஏறுதலில் வெற்றிபெற்ற பெண்ணிற்கு - பதக்கம்
---------------------------------------------------------------
கூடைப்பந்தாட்டத்தில் மலேஷிய முஸ்லிம் பெண்மணிகள்
---------------------------------------------------------------

பதிந்தது
அபூ ஸாலிஹா
at
Monday, January 02, 2006
0
கருத்துக்கள்
சமீபத்தில் தமிழ்மணத்தில் ஒரு பதிவில் சானியா மிர்ஜாவின் உடை அணிதலைப் பற்றி கருத்து தெரிவித்திருந்த மல்லிகை-மணம் வலைப்பதிவாளருக்கு, கருத்துக்கள் கடல்போல் குவிந்தது. ஒரு பெண் வலைப்பதிவாளரோ ஒருபடி மேலேபோய் இதுபற்றி தனிப்பதிவே போட்டுவிட்டு பின்னர் பின்னூட்டப் பிரச்னைகளால் வருத்தப்பட்டார்.
கொழுவி என்பவரோ இதை அபத்தம் என்றதோடு நில்லாமல் "100 m. ஓட்டப் பந்தயத்துக்கு இப்படி மூடிக்கட்டிக்கொண்டு ஓடி ஒருவரால் வெல்ல முடியுமென்று யாராவது சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? வேண்டுமானால் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்கள், அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்கு இவ்வுடைப்பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எல்லா விளையாட்டுக்களுக்கும் அது பொருந்துமென்பது கேலிக்கூத்து" என்றார்.
அத்தோடு நின்றாரா என்றால் இல்லை. "இதை மறுத்துரைக்க வந்த பர்வீன் கூட கிரிக்கெட்டையும் டெனிசையும்தான் ஒப்பிட முடிந்தது. உயரம் பாய்தலையும் அதையும் ஒப்பிட முடியவில்லை." என்று பெரும்போடு போட்டார்.
Babble என்பவரோ நக்கலாக "மேலே உள்ள படங்களில், அவர்கள் வெற்றி பெற்றார்களா என்று குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்" என்றார்.
அத்தி பூத்தார்போல் ஆதரித்து எழுதிய மு.மயூரன் "முதலாளிய ஊடகங்களால் மிகைப்படுத்தப்படும் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்களின் உடைபற்றிய எனது அவதானிப்பில்,பெரும்பாலும் அது தமது உடற்பகுதிகளை வெளிப்படுத்தி அதன்மூலம் சில நலன்களை பெறுவதற்கானதாகவே இருக்கிறது" என்றார்.
சரி விஷயத்திற்கு வருவோம்! மேலேலேலே கண்ட பின்னூட்டங்களுக்குப் பதிலே இப்பதிவு. வளைகுடா நாடுகளில் ஒன்றான (தோஹா) கத்தரில் 2006 ல் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப்போட்டி-களுக்கான வெள்ளோட்டமாக, பிரம்மாண்டமான முறையில் நடந்து வரும் 3வது மேற்கு ஆசிய விளையாட்டுப்போட்டி-களின் முடிவுகள் இன்று (அதாவது டிசம்பர்-10, 2005) வெளியாகி உள்ளது.
கலந்து கொண்டவை மேற்காசிய நாடுகள் என்பதால் போட்டிகளில் இஸ்லாமிய உடையணிந்த பெண்களை விட, சாதாரண உடையணிந்து கலந்து கொண்டவர்கள் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடலை மறைக்கும் உடையணிந்து விளையாட்டில் வெற்றி பெற முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும்முகமாக வெற்றி பெற்ற இஸ்லாமிய பெண்களில் சிலரின் விபரங்கள் கீழே:

உயரம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈரானைச் சேர்ந்த நபிஸாதிக் ஃபர்த்ஸ்
*********

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த பஹ்ரைனைச் சேர்ந்த பெண் வீராங்கனை ரோக்யா அல் கஸாரி.
மேலும் காண்க:
இஸ்லாம் ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளை பெண்களுக்கு (குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில்)கொடுத்தாலும் பெண்களின் உடலமைப்பைப் கணக்கில் கொண்டு உடையளவில் மாற்றம் ஏற்படுத்துகிறது. கண்ணியத்திற்காக உள்ள உடைக்கட்டுப்பாடுகளினால் இப்போது எதில் பின்னடைவு வந்துவிட்டது? என்று இவர்கள் பட்டியலிடுவார்களா? எந்த ஒரு உலக வாழ்க்கை நெறியிலும் கூறப்படாத பெண் சமத்துவத்தை இஸ்லாம் கொடுக்கும்போது, பெண்ணுரிமை பேசுவதாக எண்ணிக்கொண்டு கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
சிறந்த வலைப்பூக்களுக்கான (Weblog Award) இறுதிகட்ட சுற்றில் வெற்றி பெற்ற அமெரிக்கப்பெண்மணி ஒருவரின் இது தொடர்பான கருத்து:
பதிந்தது
அபூ ஸாலிஹா
at
Saturday, December 10, 2005
2
கருத்துக்கள்