Pages

15 December 2006

உடை ஒரு தடையா? பாகம்-2

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஹிஜாப் என்பது தடைக்கல்லை ஏற்படுத்துமா?
கிட்டத்தட்ட உடைகளே உடைகளில் இல்லை என்ற ரீதியிலான போட்டியாளர்களுடன் ஹிஜாப் அணிந்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடம் வென்ற பஹ்ரைனைச் சேர்ந்த அல் கஸரா ருக்கையா (Al Ghasara Ruqaya)

இறைவன் ஒன்றை எளிதாக்கியிருக்க அதைத் தடைக்கற்களாக்க எவரால் இயலும்?
இறைவன் தடையேற்படுத்தியிருப்பதை எளிதாக்க எவரால் இயலும்?

கத்தர் நாட்டில் கடந்த 2006 இல் மெடல்ஸ் டாலி ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருக்கையா வென்ற வீடியோ படக்காட்சி:



25 November 2006

சகோதரி யுவான் ரிட்லியின் கட்டுரை!

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்...

"நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.

15 July 2006

இவான் ரிட்லி (Yvonne Ridley) பேட்டி வீடியோ!

இஸ்லாத்தின் பால் தான் கவரப்பட்ட விதம் பற்றிய இவான் ரிட்லி அவர்களின் பேட்டி



இவான் ரிட்லி அவர்களின் தளம்: http://www.yvonneridley.org/

29 March 2006

ஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்!

ஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்
தடையை எதிர்த்து வழக்குப்போட்டு வெற்றி பெற்றார்



ஆர்ம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்த முஸ்லிம் பெண், ஆண்களின் கைகளை குலுக்க மறுத்து விட்டார். இதனால் பயிற்சிக் கல்லூரி அவரைச் சேர்ப்பதற்கு தடை விதித்து விட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அவர் அதில் வெற்றி பெற்றார்.

20 வயது பாத்திமா

நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் பெண் பாத்திமா அம்கர். 20 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேருவதற்காக மனு செய்து இருந்தார்.இதற்கான நேர்முகத்தேர்வுக்கு அவர் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரை நேர்முகத் தேர்வு செய்ய இருந்த ஆசிரியர்கள் கைகுலுக்குவதற்காக கையை நீட்டியபோது கைகொடுக்க மறுத்து விட்டார்.

மதக்கட்டுப்பாடு

12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுடன் எந்தவிதமான ஸ்பரிசத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய மதக் கட்டுப்பாடு என்று பாத்திமா அதற்கு விளக்கமும் கொடுத்தார்.

இதை கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. கைகுலுக்குவது டச்சு சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரியாதை தெரிவிக்கும் அடையாளம் ஆகும் என்று கூறிய நிர்வாகம், அவரைச் சேர்ப்பதற்கு தடைவிதித்தது.

கோர்ட்டில் வழக்கு

இதை எதிர்த்து பாத்திமா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சமமாக நடத்தும் கமிஷன் தடை விதித்ததன் மூலம் பாத்திமாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்று கூறி பாத்திமாவை கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டு உள்ளது.

ஒதுக்கும் ஆபத்து

முஸ்லிம்களின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமுதாயத்தில் இருந்து முஸ்லிம் பெண்களை ஒதுக்கி வைக்கும் ஆபத்தை கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி விடும் என்றும் கமிஷன் எச்சரித்தது.

இதே கமிஷன் தான் கடந்த ஆண்டு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வர மறுத்த முஸ்லிம் பெண் சமீராவை ஆசிரியராகச் சேர்க்க மறுத்த இஸ்லாமிய பள்ளிக்கூடத்துக்கு எதிராக தீர்ப்பு கூறியது.

இது தொடர்பான ஆங்கிலச் செய்திகளுக்கு:

இஸ்லாம் ஆன் லைன்.காம்

யாஹூ செய்திகள்

ஸ்விஸ் பாலிடிக்ஸ்

05 March 2006

ஆண்களும், பெண்களும்!

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:124
___________________________________________________

3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். 'உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்...

ஸூரத்துல் ஆலஇம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) 3:195
___________________________________________________

இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்.

ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:221
___________________________________________________

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.

ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:228
___________________________________________________

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:32
____________________________________________________

4:7 பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே¢ (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.

ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) 4:7

01 March 2006

பாலியல் பலாத்காரம் - அமெரிக்காவிற்கே முதலிடம்

மெரிக்காவிலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 70 விழுக்காட்டினர் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அமெரிக்கப் பெண்கள் பல்கலைக்கழக சங்கம் (American Association of University Women) சமர்ப்பித்த தகவல்களின் படி, பெரும்பாலான இத்தகையப் பாலியல் தொந்தரவுகள் நடைபெறுவது கடைவீதிகளிலோ, அல்லது மற்ற பொது இடங்களிலோ அன்று; மாறாக, அமெரிக்கக் கல்லூரி வளாகங்களுக்குள்ளேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மூன்றில் இரண்டு பகுதியினருக்கும் மேலான மாணவ மாணவியர்களுக்கு உடல் ரீதியான இத்தகைய தொந்தரவுகள் கல்லூரிகளில் எதிர்பால் மாணவர்கள் மூலம் ஏற்படுவதாகவும் 10 விழுக்காடு மாணவர்களுக்கு எதிர்பால் பள்ளி அலுவர்கள்/ஆசிரியர்கள் மூலம் ஏற்படுவதாகவும் அறிக்கை நீள்கிறது. (புள்ளிவிபரங்களுக்கு நன்றி: Reuters - 24-02-2006)

ஒரே வகுப்பறைகளில் படிக்கும் மாணவர்களும், ஒத்த வயதுடைய மாணவியர்களும் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசி, பழகிக்கொள்ளும் வாய்ப்பு வசதிகளையும் கொண்டதால் இம்மாதிரியான தவறுகள் நடப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சாட்டிங், செல் போனில் அரட்டை, செக்ஸ் ஜோக்குகளை பரிமாற்றிக்கொள்ளுதல் என்ற ரீதியில் வளரும் இந்த நவீன நட்பு(?), விபரீதத்தில் சென்று முடியும் போது மட்டும் குய்யோ, முறையோ எனும் கூக்குரல் எழுகிறது.
ஈவ் டீஸிங்-கில் ஆரம்பித்து பாலியல் பலாத்காரம் வரை கல்வி கற்கும் மாணவர்கள் அனுபவித்து வரும் உடல் மற்றும் மன ரீதியிலான சிக்கல்களைத் தினந்தோறும் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். கடுமையான(?) சட்டங்களைப் பிறப்பித்து இதைத் தடுத்துவிடலாம் என்று அரசாங்கம் எண்ணினாலும் இதற்குத் தீர்வுகாண முடியவில்லை. நாளொரு பலாத்காரமும் பொழுதொரு தற்கொலையுமாக தினம் போய்க்கொண்டுதான் இருக்கிறது.

சரி.. இதன் தீர்வு தான் என்ன? எங்கேயும் தேடி சிரமப்பட வேண்டியதில்லை. திருமறைக் குர்ஆன் மிக எளிய வழியைக் கூறுகிறது.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.(அல் குர் ஆன் 17:32)

விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்பது, ஏதோ விபச்சாரிகளைத் தேடிப்போகாதீர்கள் என்று பொருளல்ல. விபச்சாரம் செய்ய அல்லது அதைத்தூண்டுவதற்கான காரணிகளைக் கண்டுபிடித்து அதன் வாசல்களை அடையுங்கள் என்பதே!

உலக நாடுகளின் பிரச்னைகளை தீர்க்கவே(?) தான் அவதாரம் எடுத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, தன் நாட்டில் பெருகிவரும் இத்தகைய பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக முதன் முறையாக கவலை தெரிவித்திருப்பதும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய முற்படும் முயற்சிகளும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பிரச்னையையும் இவ்வுலகத்திலிருந்து முற்றிலுமாக நீக்க, அதன் ஆணிவேரை அலசி ஆராய்ந்து அடியோடு ஒழிக்க நினைக்கும் உலக அரசு இயந்திரங்கள், இவ்விஷயத்தில் பாராமுகமாக இருந்து விடாமல் இஸ்லாம் அறிவுறுத்தும் வழிகளைக் கையாண்டால் இத்தகைய பாலியல் பலாத்காரங்களை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

21 January 2006

பாதுகாப்பு! (கவிதை: ஜெஸிலா ரியாஸ், துபாய்)

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது

எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

நன்றி: நண்பன் (ஜனவரி திசைகள் இதழ்)

04 January 2006

இஸ்லாம் பற்றி ஜப்பானியபெண்!

சமீபத்தில் நடைபெற்ற வளைகுடா விளையாட்டுப்போட்டிகளுக்கான செய்திகளைத் தொகுப்பதற்காக கத்தர் நாட்டிற்கு வந்திருந்த ஜப்பானின் பிரபல விளையாட்டு செய்திபத்திரிகையாளரான மயோக்கோ என்ற கிறிஸ்துவ பெண் சென்றவாரம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

"குர்ஆன் கூறும் வாழ்வியல் நெறியே என்னை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது" என்று கூறும் இவருடன் நடந்த நேர்காணல்:

Largest Mosque in Tokyoகேள்வி: இஸ்லாத்தை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?
பதில்: 9/11 தாக்குதலுக்குப்பிறகு இஸ்லாத்தையும் அதன் வரலாற்றுபின்னணியையும் தெரிந்துகொள்ளும் ஆவல் எனக்குப் பிறந்தது. அதற்கான ஒரு முயற்சியாக, செய்தி ஊடகங்கள் சித்தரிக்கும் "இஸ்லாமிய தீவிரவாதம்" பற்றிய ஆய்வில் இறங்கினேன். இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டி அரபி மொழியைக்கற்றுக்கொண்டேன். திருக்குர்ஆனின் மூலமொழியான அரபியைக்கற்று திருக்குர்ஆனை முழுமையாக படித்துப்பார்த்த எனக்கு பல விஷயங்கள் அதிர்ச்சிகரமான இருந்தது. செய்தித்துறையில் பணியாற்றும் நான், இஸ்லாத்தைப்பற்றி எவ்வாறு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என்பதை அப்போது தான் தெரிந்துகொண்டேன்.

இஸ்லாத்தைப்பற்றி ஜப்பானியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
இதைச் சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. ஜப்பானியர்கள் இஸ்லாத்தைப்பற்றி அதீத அச்சமும், தவறான எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள். காரணம், மேற்கத்திய செய்தி ஊடங்கள் இஸ்லாத்தைப்பற்றிய தவறான செய்திகளைத்தான் எங்களுக்கு தந்துகொண்டிருக்கிறன.

இஸ்லாத்தில் உங்களைக்கவர்ந்தது எது?
பல விஷயங்களைச் சொல்ல முடியும். முக்கியமாக சகோதரத்துவம், உறவினர் மற்றும் அண்டை வீட்டார்களைப் பேணும் முறைகள், பணக்காரர்கள், ஏழைகளுக்கு செலவு செய்யும் திட்டங்கள், சத்தியத்தைப்பேணுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நான் திருக்குர் ஆனில் கூறப்பட்ட இக்குணங்களை நேரில் இந்நாட்டு மக்களிடம் செயல்முறையில் கண்கூடாக கண்டதில் எனக்கு பெரும் ஆச்சரியம்.

ஹிஜாப் அணிவது பற்றி கூறுங்களேன்?
ஹிஜாப் அணிவதை நான் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். இதை நான் வாழ்நாள் முழுவதும் என்றென்றும் கடைபிடிப்பேன்.

நீங்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு உங்கள் நண்பர்கள் யாரேனும் உதவினார்களா?
ஆம்! அஹ்லம் என்கிற கத்தர் நாட்டு பெண்மணி இஸ்லாத்தைப்பற்றி பல்வேறு தகவல்களைத் தந்து எனக்கு ஆர்வமூட்டினார். தூய இந்த மார்க்கத்தை ஆழமாக அறியச்செய்த அவருக்கு, நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் இஸ்லாத்தை தழுவிய விஷயம் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா?
இதுவரை தெரியாது.

ஜப்பானுக்கு திரும்பிச்செல்லும் நோக்கம் உள்ளதா?
இல்லை. எனக்கு இங்குள்ள இஸ்லாமிய சூழல் மிகவும் பிடித்துள்ளது. எனவே, இங்கேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன்.

உங்கள் திருமண ஏற்பாடுகள் பற்றி?
இறைவன் நாட்டத்தினால், கண்டிப்பாக நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொள்வேன். அவர் என்னை புரிந்து நடப்பவராகவும் விளையாட்டில் ஆர்வமுள்ளவராகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

02 January 2006

Sports & Hijab










இராணுவத்தில் ஹிஜாபுடன் பெண்கள்

---------------------------------------------------------------
Image hosted by Photobucket.com

துப்பாக்கிச் சுடும் போட்டியில் - நஸீமா

Image hosted by Photobucket.com
மலை ஏறுதலில் வெற்றிபெற்ற பெண்ணிற்கு - பதக்கம்

---------------------------------------------------------------

















கூடைப்பந்தாட்டத்தில் மலேஷிய முஸ்லிம் பெண்மணிகள்

---------------------------------------------------------------

பென்ஸில்வேனியாவின் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ரிலே ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவி ஒருவர்

---------------------------------------------------------------
























கிரிக்கெட் விளையாட்டில் - சனா ஜாவித்

---------------------------------------------------------------

மேலும் காண்க: உடை ஒரு தடையா?